தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காதின் கேட்கும் திறன்

காதின் கேட்கும் திறன் முழுவதும் செவிப் புலனே சார்ந்தது ஆகும்.ஆம். மனிதனுக்கும் அவன் சார்ந்துள்ள சுற்றுச்சூழலுக்குமிடையே மிகப் பெரிய தொடர்பை செவிப் புலனே ஏற்படுத்துகிறது.எனவே அந்த செவிப்புலனே இழந்துவிடாதவாறு பாதுகாத்துக்
கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும்.

அதற்கான சில வழிமுறைகள்

காது ஒட்டையின் உள்ளே கொண்டை ஊசி ,பென்சில் ,தீக்குச்சி ,கோழி இறகு போன்ற
பொருட்களைச் செலுத்தி காதை சுத்தபடுத்த முயற்சிக்க வேண்டாம்.

அதிக ஒலியை தொடர்ந்து கேட்பது, நீங்கள் வேலை செய்யும்மிடம் அதிக ஓலியை எழுப்பும் இடமாக இருந்தால் உங்கள் செவிப்புலனை பாதிக்க சூடும்.

டைபாய்டு ஜீரம்,அம்மை போன்ற நோய்கள் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் எனில் அது பிறக்க இருக்கும் குழந்தையின் செவிப்புலனைப் பாதிக்கும்.

இதுமாதிரி பல காரணங்கள் இருக்கின்றன.செவிபுலன் பாதிப்பை முடிந்த வரை மீட்டு தர காது கேட்கும் கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.

அதில் முக்கியமானவை

Behind the Ear




In the Ear



Completely in the Canel




இது எல்லாம் நீங்கள் இழந்து இருக்கும் செவிபுலன் இழப்பு மற்றும் உங்களது கையிருப்பை
பொறுத்தது தான்..

நன்றி: மயூரா Hearing Eids -ரமேஷ்

ஒட்டகங்கள்

படிக்கும் காலத்தில் பாலைவன கப்பல் எது என்ற கேள்விக்கு பதிலாக தான் ஒட்டகம் அறிமுகம் ஆனது .அதன் பிறகு அப்ப அப்ப சர்க்கஸ் சென்றால் அங்கு அழகிகளின் அணி வகுப்பு மாதிரி ஓட்டங்களின் அணிவகுப்பை பார்த்த அனுபவம் உண்டு.

அப்புறம் இங்கு வந்த பிறகு பாலைவனத்தில் வேலை பார்க்க நேர்ந்த போது ஒட்டகத்தை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்ம ஊர்ல ஆடு,மாடு வளர்ப்பதை போல் இங்கு ஓமனில் ஒட்டகத்தை வீட்டில் வளர்க்கிறார்கள்.ஒரே வித்தியாசம் பெட்ரோல் விலை குறைவு என்பதால் கார்ல சென்று ஒட்டகத்தை மேய்க்கிறார்கள்.பல சமயங்களில் உரிமையாளர்களுடன் உரிமையாக குழந்தை போல் பழகுகிறது.உருவம் தான் பெரியது.குழந்தை மனசு தான் போல.

அது மாதிரி ஒட்டகம் சாலையில் கடக்க நேர்ந்தால் ஒட்டகத்திற்கு வழி விட்டு தான்,பின்னர் அனைவரும் வாகனத்தில் சாலையை கடக்கிறார்கள்.மரியாதைக்கு இல்லங்க .பயம் தான்.ஒட்டகத்தின் மீது மோதினால் வாகனத்திற்கு அதிக சேதாரம் ஏற்படுவதுடன் செய்கூலியாக சுமார் ஒரு இலட்சம் வரை (ஒட்டகம் இறக்க நேர்ந்தால்) அபராதம் விதிக்கப்படுகிறது.



ஒட்டகத்தின் முரட்டு நாக்கில் இருக்கும் சுவை அரும்புகள் படு மந்தமாம்.எனவே பலசமயங்களில் காய்ந்து போன குச்சிகள்,உலர்த்த இலை,தழைகளை என்று கிடைத்ததையெல்லாம் சாப்பிடுகிறது.தண்ணிர் தேவை பெரிய பிரச்சனையே இல்லை.அதற்கு பதில் எச்சிலை உபயோகிக்கிறது.அது மாதிரி சமயங்களில் எச்சிலின் அளவு 100 முதல் 180 லிட்டர் வரை சுரக்குமாம்.மேலும் சில ஒட்டகங்களுக்கு நீந்த தெரியுமாம்.

அப்புறம் ஒட்டக பால்.நண்பர்களின் வற்புறுத்தலினால் ஒரு முறை ஒட்டக பால் சாப்பிட நேர்ந்தது.சாப்பிட்ட பிறகு கடுமையான வயிற்று போக்கு..எல்லாம் முடிந்த பிறகு நண்பர் சொன்னார் முதல் முறையாக சாப்பிட்டால் அப்படி தான் இருக்கும்.அடுத்த முறை முயலலாமா என்று?

நன்றி ஆனந்தகுமாரின் பல்துறை தகவல்கள்

காற்று பை

பெரும்பாலும் கார்விபத்து ஏற்படும்போது நமது மார்புபகுதி, ஸ்டியரிங்க் அல்லது ஃடாஷ்போர்டில் மோதும்போது தான் விபத்து பாதிப்பு அதிகம். சில சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுகின்றது.அதனை தவிர்பதற்க்கு தான் இந்த Air Bag (தமிழில் காற்று பை - சரியா?) அமைப்பு.விபத்துகாலங்களில் கார் மோதும்போது மோதும்வேகத்தை பொறுத்து தானகவே வெடித்துவெளியேவருமாறு அமைக்கபட்டுள்ளது.

விபத்தில் வெடித்த காற்று பை ஒன்று

பென்சில்


பெரும்பாலும் பென்சில் வாங்கும்போது நடராஜ் கம்பெனியா,கேம்பிலின் கம்பெனியா என்று பார்த்து வாங்குவோம்.ஆனால் பென்சிலின் மேல்பகுதியில் எச்பி,2 எச்பி மற்றும் 2எச் என போட்டிருக்கும் .அதை அனைவரும் கவனித்து இருப்பிர்களா என தெரியவில்லை.எச் என்றால் ஹார்டு, என்றும் பி என்றால் பிளாக் என்றும் அர்த்தம்.அது பென்சிலில் உள்ள கிராஃபைட் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது ,எந்த அளவுக்கு கருப்பாக எழுதும் என்பதை தெரிவிக்கும்.

2 எச்பி, மற்றும் 2 எச் போன்ற பென்சில்கள் பொறியியல் வரைபடங்கள் வரைய அதிகம் பயன்படுகின்றது.இப்போது மைக்ரோடிப் போன்ற நவீன வகை பென்சில்கள் அதிகமாக உபயோகத்தில் உள்ளன.