மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர்

ஒரு வருடம் ஊரில் இல்லாமல் ,திரும்பி
வந்தால் பல மாற்றங்கள் ஊரில் ஏற்படுவது இயற்கைதான்

ஆனால் இந்த முறை ஏற்பட்ட சில மாற்றங்கள் மனதை பாதித்தது.


இப்போது சுந்தரம் தியேட்டரின் நிலை



பழைய காவிரி பாலம் இருந்த இடம்




ஆகிய இரண்டுக்கும் பிரியாவிடை கொடுத்துஇருக்கிறார்கள்..

வாஸ்து சாஸ்த்திரம்

கிழக்கு,மேற்கு,வடக்கு, மற்றும் தெற்கு என்ற வகையில் திசைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.ஆனால் வாஸ்துவில் திசைகளை வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என்ற வகையில் மேலும் பிரிக்கலாம்.

அவ்வாறு பிரித்த திசைகளுக்கு பெயர் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு - ஈசானிய மூலை
வடமேற்கு - வாயு மூலை
தென்கிழக்கு - அக்னி மூலை
தென்மேற்கு - கண்ணிமூலை

இதில்
வடகிழக்கு - ஈசானிய மூலை.மிகவும் புனிதமான மற்றும் சுத்தமான மூலை இது வாகும்.இங்கு தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.காங்கிரிட் முதல் வீட்டு மனை பூஜை வரை ஆரம்பிப்பது இங்கு தான்.
வடமேற்கு- வாயு மூலை.கழிவு நீர் தொட்டி அமைப்பது சிறந்தது
தென்மேற்கு - கண்ணிமூலை.இந்த மூலை மற்ற பகுதியை விட மேடாக இருக்க வேண்டும். overhead Tank அமைக்கிறார்கள்
தென்கிழக்கு - அக்னி மூலை.சமையல் அறை அமைக்க சிறந்த மூலை

இது மாதிரி பல வாஸ்து டிப்ஸ் இருக்கின்றன.இதில் எதுவெல்லாம் அறிவியல் பூர்வமானவை,அதற்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

வாஸ்துவின் அடிப்படை இயற்கையாக கிடைக்கும் சூரிய ஓளி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றை நமது கட்டிடத்தில் அதிக அளவில் பயன்படுத்தி கொள்வது தான்.இது எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்க்கலாம்.

பூமி சுற்றும் போது அதன் ஆக்சிஸ் நேராக இல்லாமல் சற்று சாய்வாக 23 1/2 டிகிரி அளவில் சுற்றுவது எல்லாருக்கும் தெரிந்ததே.இதனால்தான் சூரிய ஓளி கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதற்கு முன்பு தெற்கில் விழுகிறது.

படத்தை பாருங்க.



எனவே தான் கிழக்கு காலையிலும் , மேற்கு மாலையிலும் தெற்கு கிட்டதட்ட நாள் முழுவதிலும் ஓளியையும் பெறுகிறது.

மேலும் வடக்கு பகுதி குறைந்த அளவே ஓளியையும் ,வடகிழக்கு பகுதி முற்பகுதியிலும் வடமேற்கு பகுதி நாள் முழுவதும் கூலாகவே இருக்கிறது

எனவே நாம் வீடு அமைக்கும் போது திறந்த வெளி (open space ) எப்போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அதிக அளவில் விடுவது நல்லது .அவ்வாறு அமைப்பதனால் இயற்கையாக கிடைக்கும் வெளிச்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம்

அதனால் தான் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக உயரமான மரமோ,சுவரோ எழுப்ப கூடாது.அதனால் தான் வாஸ்துவில் தென் மேற்கு பகுதியில் கட்டிடத்தை சற்று உயரமாக பண்ண சொல்லுறாங்க.

மேலும் வாஸ்து அடிப்படையில் ஒவ்வோரு அறைக்கும் எந்த அறை எங்கு
அமைக்கலாம் என்பதை கீழே பாருங்க

Bed -( NW-W-SW)- To receive plentiful of breeze in summer
Kitchen -( E-SE )-To receive morning sun which is germicidal
Dinning-(SE-S-SW)-proximity of kitchen .it should be cool
Drawing -(SE-S-SW-W)-Adequate nature lighting during winter
Reading -( N-NW )-Light from north being diffused and evenly distributed and cool
Store -(NW-N-NE)- Dark & cool

இந்த படத்தை பாருங்க.எளிமையா புரியும்



அடடா.நம்ம வீடு வாஸ்து படி இல்லையே?என்ன பண்ணலாம் ரொம்ப யோசிச்சு சங்கம் வைத்தால் என்னையும் அதுல சேர்த்துக்குங்க..எங்க வீடும் அப்படி தாங்க இருக்கு..இருக்கிற வீட்டை வாஸ்து படி வீட்டை மாற்றி அமைக்க முயற்சி செய்தால் அதனால் ஆகும் செலவுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.