கொசுவர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொசுவர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

(அ) ஆரம்பப் பள்ளி

இங்கு தான் நான் முதல்முறையாக அ,ஆ,........படித்த இடம் என்பதை பெருமையுடன் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த முறை ஊருக்கு போனபோது என் பள்ளியை பார்த்த போது பல நினைவுகள் திரும்பி பார்த்தன.

1959 ம் ஆரம்பிக்கப் பட்டாலும் நான் படிக்கும் போது எப்படி இருந்ததோ அது மாதிரி தான் இருந்தது.ஆனால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது போல் தெரிகிறது.(எல்லாம் புதிதாக வளர்ந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளால் தாங்க)



படிக்கும் போது எனக்கு ஆனா,ஆவண்ணா (அ,ஆ,இ,...அப்படி சொல்லி கொடுத்தால் கஷ்டமா இருக்கும்ல)சொல்லி கொடுத்த ஆசிரியர் தியாகராஜன் ஒய்வு பெற்று பள்ளிக்கு மிக அருகில் வசித்து வருகிறார்.இவர் ஆசிரியர் மட்டும் அல்ல.நல்ல கர்நாடக இசை பாடகரும் கூட.அவர் மேடையில் பாடும் போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரது முக மாற்றங்கள் மற்றும் ராகத்திற்கு ஏற்ற கைஅசைவுகள் வசீகரமான குரல் ஆகியவவைகள் மிகவும் பிடிக்கும்.

தங்கையின் திருமணத்திற்கு சாரும் வந்த போது வேலை எப்படி இருக்கு? உணவு எப்படி இருக்கு?என்று என்னை பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்ததை உணர முடிந்தது. இது மாதிரி ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தது பாக்கியம் தான் .

அடுத்ததா நினைவுக்கு வரும் டிச்சர் பால்பினா டிச்சர்.தொடக்கப்பள்ளி என்பதால் விளையாட்டுக்கு அதிக முக்கியதுவம் இல்லாமல் இருந்தது .டிச்சர் வந்த பிறகு நிலையே வேறு.அவர்கள் நடத்திய ஓட்டப்பந்தயம் அப்போது வித்தியாசமான அனுபவம் தான்.

அப்புறம் தேர்வு சமயத்தில் இங்கு முக்கிய கேள்விகள் தந்து விடுவார்கள்.எனவே தேர்வு எல்லாம் சுமையாக தெரிந்ததில்லை.

நான் படித்த ஆரம்ப பள்ளிக்கு இதுவரை நான் சொல்லி கொள்ளும் அளவு எதுவும் செய்யாதது நெருடலாக தான் இருக்கிறது.அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக ஏதாவது செய்யனும் என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.

குசேலன் படம் பார்த்த போது நண்பர்களின் நினைவுகளால் வந்த கண்ணீரை தவிர்க்க இயலவில்லை. எனக்கு கூட சில நண்பர்கள் (முருகராஜ்,சுந்தர் மற்றும் மணி ) ஆகியோர் அந்தப்பள்ளி பருவத்தில் கிடைத்து இன்னமும் நண்பர்களாக தொடர்வதில் சந்தோசம் தாங்க.

அப்புறம் பள்ளி மூலம் கிடைத்த பால்ய நண்பன் சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி




கல்லூரி படிப்பை படித்து முடித்து விட்டு,வெளியே வந்தஉடனே
நான் விரும்பிய ஆசிரியர் பணி சொந்த ஊரில் கிடைத்த போது
மகிழ்ச்சியாக தான் இருந்தது.

ஆனால் எனக்கு ஓதுக்கபட்ட பாடம் Engineering Drawing.படிக்கும் போது ஓன்றுமே விளங்காத பாடம்அப்படினு கூட சொல்லலாம். கல்லூரியில் கிடைத்த அருமையான நண்பர்கள் மற்றும் நல்ல புத்தகங்கள் (படிக்கும் போது அந்த புத்தகங்களை பார்த்ததேயில்லை) உதவியுடன் ஒரு மாதிரி சமாளித்தேன்.

ஆனால் அடிக்கடி மனதில் உதிக்கும் கேள்வி., நமக்கு இந்த வேலைக்கு தேவையான பொறுமையும்,பொறுப்பும் உண்டா என்று?ஆனால் மாணவ நண்பர்களின் அருமையான ஓத்துழைப்பு ,அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றின் காரணமாக அந்த எண்ணம் சிறிது சிறிதாக மறைய தொடங்கியது.

கைநிறைய சம்பளம் வாங்க விட்டாலும் ,மனம் நிறைவான சம்பளம் வாங்கி வாழ்க்கை ஓட தொடங்கியது ஒரு வருடத்திற்கு பிறகு ஆசிரியர் பணி விட்டு ராஜினாமா செய்த போது கூட பெரிய வருத்தம் இல்லை. ஆனால் கடைசி நாள் கல்லூரியை விட்டு வந்த போது கண் கலங்கியது உண்மை.அடுத்த வேலை பற்றி கவலையால் அல்ல அது.அந்த அருமையான நண்பர்கள் மற்றும் வேலை செயத சூழ்நிலையை விட்டு விலகிசெல்கிறோம் என்பதை நினைத்து தான்.

இப்போது பொருளாதர தேவைக்காக ஓமன் நாட்டில் பொறியாளர் பணி .விரைவில் மீண்டும் ஆசிரியர் பணி தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.

Drawing பாடத்தில் அடிப்படையை சொல்லிகொடுத்த RKN Sir க்கும் ,முதல் நாள் எப்படி வகுப்பு எடுப்பது என்று சொன்ன VS sir இதன் முலம் நன்றி தெரிவித்து கொள்கிறேன்..